search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரத்தான் போட்டி"

    • ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும்.

    கோவை:

    கோவை கணபதியை அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு குறித்தும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் சைலேந்திரபாபுவும் பங்கேற்று ஓடினார்.

    2 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்ட பந்தயத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் கஞ்சா வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை தொடங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தோம். இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

    இதே போன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகின்றது. இன்றைய குழந்தைகள் ஓடுவதற்கே தயாராக இல்லை. இது அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளுக்கு விதையாக இருந்து வருகின்றது.

    குழந்தைகள் மினிமம் 5 கிலோமீட்டர் தூரம் ஒட வேண்டும். இதற்கு இது மாதிரியான ஓட்ட போட்டிகளை அனைத்து பள்ளிகளும் நடத்த முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • போட்டியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப் படும் ஒரு விளையாட்டு. இந்த போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெரும்பாலும் சர்வ தேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக் கான தூரம் 10 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.

    மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே கடையம் தோரணமலையில் குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவு முறையுடன் ஆரோக்கியத்தை பேணு வதை வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    மாரத்தான்

    இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது. காலை 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது. இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர்

    போட்டியை தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு

    விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு பரிசு களை வழங்கினார். முன்னதாக போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், 3-வது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம் பாலமுருகன், தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கோவில் திருவிழாவில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு போதை விழிப்புணர்வு குறித்த இரு பாலருக்கான மாரத்தான் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தற்போதைய கால கட்டத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர் அணி சார்பில் முதலாம் ஆண்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டியை சுரேஷ் என்ற சுருளிசாமி, நாட்டாமைக்காரர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய நிர்வாகிகள்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தேனி தெற்கு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வசந்தன், முன்னாள் கம்பம் நகர சேர்மன் சிவக்குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம் வ. உ.சி. திடலில் தொடங்கி காமயகவு ண்ட ன்பட்டி, நாராயண த்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக மீண்டும் கம்பம் வ.உ.சி. திடலில் முடிவுற்றது. சுமார் 13 கி.மீ. தூரம் ஆண்களுக்கும், 5 கி.மீ. தூரம் பெண்களுக்கும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடந்தது.
    • முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப கோணம்) லிட். காரைக்குடி மண்டலம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005, விழிப்புணர்வு வாரத் தை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை உதவி காவல் கண்காணிப் பாளர் ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழக காரை க்குடி பொது மேலாளர் சிங் காரவேலு ஆகியோர் காரைக்குடியில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.

    அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார மாக கொண்டாடும் வகை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம் சார் பில் தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் தகவல் அறி யும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மண்டல தலை மை அலுவலகத்திலும் கிளை அலுவலகங்களிலும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் , காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் பயிற்சி பெறும் பணியாளர் கள் பங்கேற்றனர்.

    காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி சூடாமணிபுரம் , அழகப்பா பல்கலைக்கழகம், ஆரியபவன் உணவகம் வழியாக காரைக்குடி நக ராட்சி அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடை பெற்றது.

    இந்த மாரத்தான் போட்டி யில் வெற்றி பெற்றவர் களுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1500-ம், 3-ம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் (வணிகம்) நாகராஜன், (தொழில்நுட்ப ம்) நலங்கிள்ளி , (நிர்வாகம்) தமிழ்மாறன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திர வேல் உள்பட போக்குவரத் துக் கழக அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள், காவல் துறை, மருத்துவத்துறை, அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேனியில் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    • ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்ம னைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கொடுவிலா ர்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி லிருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசு வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போட்டியை மாவட்ட கலெக்டர் வளர்மதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி 17 வயது முதல் 25 வயதிற்கு ட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 10கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ என 4 பிரிவுகளில் தனித்தனியே நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் அரசினர் மேல்நிலை ப்பள்ளியிலேயே முடிவும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம், நான்காம் இடம் முதல் 10-ம் இடம் வரை பரிசுத் தொகை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்ப ட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகர், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு , போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்பட விளையாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் ஓட்டபோட்டி யில் வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    சுமார் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

    • ராமநாதபுரம் அருகே அண்ணா மாரத்தான் போட்டி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான்-2023 போட்டி நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் பரிசுகளை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின் படி மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் (எ) ஜவா, துணை அமைப்பாளர்கள் அம்பிகா நாகராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகி கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பி த்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    • ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.
    • நேரடியாக ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடையே உடற் தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து வருகிற 7-ந் தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக மாரத்தான் போட்டி தருமபுரி அரசுகலைக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.

    17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அரசுகலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசுகலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 17 வயதுமுதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடையுமாறும் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது.

    போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி (ஆதார்) சான்றிதழ்களை நாளை (6-ந் தேதி) மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000, 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலாரூ.1000, மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கு பெறும் பயனாளிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.

    எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியில் பங்கேற்று தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது.
    • போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு சார்பில் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான மாரத்தான் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இந்த மாரத்தான் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு வருகிற 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறது. சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு எஸ்.கே.எம். மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடிக்கப்படும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம், சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு முடியும்.

    25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் போட்டி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு இ.பி. அலுவலகம் வரை சென்று திரும்பி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன் முடியும். பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரம் சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு தொடங்கி வஞ்சிப்பாளையம் ரோடு கணேஷ் மகால் வரை சென்று சிக்கண்ணா அரசு கல்லூரிக்கு முன் முடிவடையும்.

    இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக 2 ஆயிரம், 4 முதல் 10 வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000 அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

    போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல் மற்றும் அசல் மருத்துவ சான்று ஆகியவற்றை சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அளிக்கலாம். மேலும் போட்டி நடக்கும் இடத்தில் அளிக்கலாம். அதன்பிறகே தனி எண் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

    • அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.
    • மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையின் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 7ந் தேதி காலை 6.00 மணிக்கு அரண்மனைபுதூர் பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து நடைபெறவுள்ளது.

    இப்போட்டியில் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் 25 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் போட்டி நடைபெற உள்ளது.

    ஓட்டப்போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்து தரவேண்டும்,

    மேலும் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர்களிடம் கண்டிப்பாக வயது சான்றிதழ் தனித்தனியாக பெற்று வருதல் வேண்டும். ஆதார் கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வருதல் வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது பிறப்புச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.

    இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை முதல் பக்கம் நகல் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

    எனவே போட்டியில் கலந்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயதுச்சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை மாலை 6.00 மணிக்குள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    உலக இருதய தினத்தை முன்னிட்டு கால்வின் மருத்துவமனை சார்பில் நாகர்கோவிலில் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நாளை மறுநாள் (29-ந்தேதி) நடைபெற உள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆண்கள், பெண்கள், 14-வயதுக்குட் பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என போட்டிகள் நடக்கிறது.

    29-ந்தேதி காலை 5 மணிக்கு போட்டியாளர்கள் பதிவு செய்யப்பட்டு காலை 6 மணிக்கு பட்டகசாலியன் விளை கால்வின் மருத்துவமனையில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்குகிறது. போட்டி யில் பங்கேற்ப வர்களுக்கு டி-சார்ட், காலை உணவு, மெடல் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்ப வர்களுக்கு ரொக் கத்தொகை வழங்கப் படுகிறது. முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கி றது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கால்வின் மருத்துவமனை சார்பில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×